» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடிபி.எம்.சி பள்ளியில் விளையாட்டு விழா

புதன் 24, ஜூலை 2024 3:06:51 PM (IST)



தூத்துக்குடி, மில்லர்புரம், பி.எம்.சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 29வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற ஸ்டீபன் தியாகராஜன் , அவரது துணைவி மெர்ஸி ஸ்டீபன் (ஹோலிகிராஸ் இஞ்சினியரிங் கல்லூரி உடற்கல்வி இயக்குநர்) ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் பால்கனி வரவேற்புரை ஆற்றினார். விழாவின் தொடக்கமாக மாணவியரின் வரவேற்பு நடனம் நடைபெற்றது. 

தேசிய மாணவர் படை, ஜுனியர் ரெட் கிராஸ், சாரண சாரணியர்கள் அணிவகுப்பு நடைபெற்றது. தேசிய, மாநில அளவிலான விளையாட்டுகளில் வெற்றி பெற்ற வீரர்கள் பெருமிதத்துடன் அணிவகுத்து ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி விழாவை சிறப்பித்தனர். சிறப்பு விருந்தினர் ஸ்டிபன் போட்டிகளைத் தொடங்கிவைக்க பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர். சிறப்பு விருந்தினர் மெர்ஸி தங்களது உரையில் விளையாட்டினால் உடலுக்கும், எதிர்காலத்திற்கும் கிடைக்கும் நன்மைகள் பற்றி சிறப்பாக எடுத்துரைத்தனர்.

பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஜுலியட் பிரேம்குமாரி விளையாட்டு ஆண்டறிக்கையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் உடற்பயிற்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. துணை முதல்வர் ஜேன் மேத்யூ நன்றியுரை ஆற்றினார். பள்ளியின் முதன்மை நிர்வாகி ஜோசப் ஜான் கென்னடி, தலைமையாசிரியை அனிதா ஹாரி, உதவி தலைமை ஆசிரியை ப்ரியா, மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Arputham Hospital







Thoothukudi Business Directory