» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 3 ஆடுகளை திருடிய ரவுடி கைது!

புதன் 24, ஜூலை 2024 11:40:09 AM (IST)

தூத்துக்குடியில் 3 ஆடுகளை திருடிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.  மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் பொன்வேல் (53). இவர் பண்டாரம்பட்டி ரோட்டில் கொட்டகை அமைத்து ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 21ஆம் தேதி 2 பைக்குகளில் வந்த 4 பேர் 3 ஆடுகளை திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.45 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக பொன்வேல் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, தூத்துக்குடி பூபால் ராயர்புரம் 2வது தெருவைச் சேர்ந்த குருசாமி மகன் ராஜேஷ் (27) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 3ஆடுகள் 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ராஜேஷ் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், அவர் ரவுடி பட்டியலில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory