» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடனை திருப்பி செலுத்த முடியாததால் பெண் தூக்குபோட்டு தற்கொலை
புதன் 24, ஜூலை 2024 11:32:32 AM (IST)
ஆத்தூர் அருகே மகளிர் சுயஉதவிக்குழு மூலம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சகாயம் மனைவி ஜூடி (35), இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுய உதவிக் குழு மூலம் ரூ.10 லட்சம் கடன் வாங்கி இருந்தாராம்.
ஆனால் கடனை திருப்பிக் கொடுக்கவில்லையாம். இதனால் மகளிர் குழுவினர் கடனை திருப்பிக் கேட்டு வற்புறுத்தினார். இதில் மன உளைச்சல் அடைந்த ஜூடி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.