» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடனை திருப்பி செலுத்த முடியாததால் பெண் தூக்குபோட்டு தற்கொலை

புதன் 24, ஜூலை 2024 11:32:32 AM (IST)

ஆத்தூர் அருகே மகளிர் சுயஉதவிக்குழு மூலம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் பெண் தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சகாயம் மனைவி ஜூடி (35), இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுய உதவிக் குழு மூலம் ரூ.10 லட்சம் கடன் வாங்கி இருந்தாராம். 

ஆனால் கடனை திருப்பிக் கொடுக்கவில்லையாம். இதனால் மகளிர் குழுவினர் கடனை திருப்பிக் கேட்டு வற்புறுத்தினார். இதில் மன உளைச்சல் அடைந்த ஜூடி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors



Arputham Hospital





Thoothukudi Business Directory