» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உ.பி., வாலிபருக்கு கத்திக்குத்து: ஹரியானா வாலிபர் கைது!

புதன் 24, ஜூலை 2024 11:06:11 AM (IST)

கல்லாமொழியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், உத்தரபிரதேச வாலிபரை கத்தியால் குத்திய ஹரியானா வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே கல்லாமொழியில் அனல்மின் நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதில் வட மாநிலத்தைச் சேர்ந்த பலர் பணியாற்றி வருகின்றனர். இதில் அரியானா மாநிலம் கிருஷ்ணா நகரைச் சேர்ந்த ராம்தாஸ் மகன் சஞ்சய்குமார் (38), உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மகதூர் மகன் ராஜேந்திர குமார் (29) ஆகிய இருவரும் ஒர ஷெட்டில் தங்கியுள்ளனர்.

நேற்று மது போதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சஞ்சய் குமார், ராஜேந்திர குமாரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்குப் பதிந்து சஞ்சய்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital







Thoothukudi Business Directory