» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கேரளாவுக்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன்அரிசி பறிமுதல்!

புதன் 24, ஜூலை 2024 8:07:04 AM (IST)



குரும்பூர் அருகே கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 20 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள நல்லூரில் கேரளாவிற்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜமுரளி தலைமையில், 10 பேர் அடங்கிய உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நல்லூர் பகுதியில் சோதனை செய்தனர். 

அப்போது நல்லூர் பத்துவீடு அருகே உள்ள ஒரு காலி இடத்தில் ரேஷன் அரசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அங்கிருந்து 400 சாக்கு மூட்டைகளில் இருந்த 20 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், கேரளாவுக்கு கடத்துவதற்காக இந்த ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. 

இதை தொடர்ந்து போலீசார் அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை லாரி மூலம் தூத்துக்குடிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்துவதற்கு பதுக்கியவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory