» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறுவனை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்ற வாலிபர் கைது!

புதன் 24, ஜூலை 2024 7:55:59 AM (IST)

கோவில்பட்டி அருகே சிறுவனை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த கூசாலிபட்டியைச் சேர்ந்த அய்யாதுரை மகன் வேல்சாமி (22). இவர் 12 வயது சிறுவனுக்கு, தவறான செய்கைகளை சொல்லிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிறுவனின் பெற்றோர் வேல்சாமியிடம் பழகக் கூடாது என கண்டித்துள்ளனர். இதனால் அந்த சிறுவன் வேல்சாமியிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அச்சிறுவனை, சம்பவத்தன்று பூசாரிபட்டி கண்மாய் அருகே வாழை தோட்டத்தில் உள்ள கிணற்றில் வேல்சாமி தள்ளி விட்டாராம். இதைப் பார்த்து அப் பகுதியில் இருந்தவர்கள், சிறுவனை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிந்து வேல்சாமியை நேற்று கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory