» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் திடீர் மாற்றம்!

செவ்வாய் 23, ஜூலை 2024 4:35:13 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆணையராக எஸ்.ஞானசேகரன் நியமிக்கப்ட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலராக பணிபுரிந்து வந்த எம்.கார்த்திக், திண்டுக்கல் மாவட்ட இணை ஆணையாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக தஞ்சாவூர் இணை ஆணையாளராக பணிபுரிந்து வந்த எஸ்.ஞானசேகரன் திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் மற்றும் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் திருப்பூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சிவகங்கை மாவட்ட இணை ஆணையர் பழனிகுமார், குமரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுபோல் தமிழக முழுவதும் 5 கோவில்களில் இணை ஆணையாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முதன்மை செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory