» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது பள்ளி வாகனம் மோதல் : 2 பேர் பலி!

செவ்வாய் 23, ஜூலை 2024 7:57:01 AM (IST)

திருச்செந்தூா் அருகே பைக் மீது தனியாா் பள்ளி வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2பேர் உயிரிழந்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகேயுள்ள நத்தக்குளத்தைச் சோ்ந்த தங்கராஜ் மகன் லிங்கம் (48), விவசாயி. அம்மன்புரம் திருவள்ளுவா் மேலத்தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் ரமேஷ் (26), ஓட்டுநா். இவா்கள் நேற்று மாலை ஒரு பைக்கில் திருச்செந்தூா் - திருநெல்வேலி சாலையில் வள்ளிவிளை விலக்கு அருகே சென்று கொண்டிருந்தனர். 

அப்போது, திருச்செந்தூா் நோக்கி வந்த தனியாா் பள்ளி வாகனம் மற்றும் பைக் எதிர்பாராத விதமாக நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது. இதில், லிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த ரமேஷை அப்பகுதியினர் மீட்டு திருச்செந்தூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். 

விபத்து குறித்து தகவல் அறிந்து திருச்செந்தூா் தாலுகா காவல் நிலைய போலீசார் சென்று, இரு சடலங்களையும் கூறாய்வுக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory