» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூா் பகுதியில் கடல் உள்வாங்கியது!

செவ்வாய் 23, ஜூலை 2024 7:51:54 AM (IST)



திருச்செந்தூா் கோயில் பகுதியில் கடல் நீா் உள் வாங்கியதால் பாறைகள் வெளியே தெரிந்தன.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பகுதியில் வழக்கமாக பவுர்ணமி, அமாவாசை நாட்களில் கடல் உள்வாங்குவது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. நேற்று முன்தினம் பவுர்ணமி தினத்தையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். 

இரவில் கடற்கரையில் தங்கியிருந்து வழிபட்டனர். நேற்று காலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட பகுதியில் சுமார் 60 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. இதனால் கடலில் இருந்த பாறைகள் வெளியே தெரிந்தன. அங்கு ஏராளமான சிப்பிகள், நத்தைகளும் தென்பட்டன. எனினும் பக்தர்கள் வழக்கம்போல் கடலில் புனித நீராடினர். பின்னர் மாலையில் கடல் இயல்புநிலைக்கு திரும்பியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory