» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாரா தடகள போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தூத்துக்குடி வீரர்கள்: மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து!

திங்கள் 22, ஜூலை 2024 5:39:50 PM (IST)



தேசிய அளவிலான பாரா தடகள விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தூத்துக்குடி வீரர்கள் மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

தேசிய அளவிலான பாரா தடகள விளையாட்டுப் போட்டிகளில் தூத்துக்குடி சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் 1 தங்கம் மற்றும் 4 வெண்கல பதக்கங்களை வென்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இதில் T-38 பிரிவில் முகமது நசீர் 100 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், F-55 பொன் மோனிஷா வட்ட எறிதலில் மூன்றாம் மற்றும் ஈட்டி எறிதல் இரண்டாம் இடமும், T-40 பிரிவில் பேபி ஷாலினி ஈட்டி எரிதலில் மூன்றாவது இடமும், T-20 பிரிவில் ஜாய் ஜெரிக்கா குண்டு எறிதலில் மூன்றாவது இடமும் பிடித்துள்ளனர். 

சாதனை படைத்த வீரர்கள் இன்று மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், மண்டல தலைவர் அன்னலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் ரெக்ஸ்லின், தனலட்சுமி, நாகேஸ்வரி  மற்றும் பாரா ஒலிம்பிக் பயிற்சியாளர் ஸ்டீபன்  ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory