» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சுங்க இலாகா ஊழியர் வீட்டு ஏசியில் பதுங்கி இருந்த பாம்பு : தூத்துக்குடியில் பரபரப்பு!

திங்கள் 22, ஜூலை 2024 4:29:13 PM (IST)



தூத்துக்குடியில் சுங்க இலாகா ஊழியர் வீட்டு ஏசிக்குள் பதுங்கியிருந்த சாரை பாம்பை துறைமுக தீயணைப்புத் துறையினர் மீட்டு பத்திரமாக காட்டுப்பகுதியில் விட்டனர் 

தூத்துக்குடி துறைமுக பகுதியில் சுங்க இலாகா ஊழியர் குடியிருப்பு உள்ளது. இங்கு வசித்து வரும், வட மாநிலத்தைச் சேர்ந்த சுங்க இலாகா ஊழியர் ஒருவரின் வீட்டில் மேலே பொருத்தப்பட்டிருந்த ஏசியில் இருந்து உஸ் உஸ் என சத்தம் வந்துள்ளது. இதை தொடர்ந்து சுங்க இலாகா ஊழியர் ஏசியை ஆன் செய்து பார்த்தபோது அதில் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதை தொடர்ந்து துறைமுக தீயணைப்பு ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாம்பு பிடி வீரர் பாட்ஷா தலைமையிலான தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து ஏசியில் பதுங்கி இருந்த சுமார் 3 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்து, பையில் வைத்து காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று பத்திரமாக விட்டனர். தூத்துக்குடியில் சுங்க இலாக்கா ஊழியர் வீட்டில் ஏசியில் பாம்பு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory