» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாரா தடகள போட்டிகளில் பதக்கம் வென்ற தூத்துக்குடி மாணவர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து!

திங்கள் 22, ஜூலை 2024 4:01:59 PM (IST)


தேசிய அளவிலான பாரா தடகள விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்களை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.5479 மதிப்பிலான மின்மோட்டார் வசதியுடன் கூடிய தையல் இயந்திரங்களையும், 05 பயனாளிகளுக்கு தலா ரூ.5341 மதிப்பிலான இலவச தேய்ப்புப் பெட்டிகளையும் என 10 பயனாளிகளுக்கு ரூ.54100 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் மற்றும் தாட்கோ மூலம் 1 பயனாளிக்கு இயற்கை மரணம் உதவித்தொகை ரூ.20000க்கான காசோலையினையும், 1 பயனாளிக்கு ஒரு கைஇழப்பு நிவாரண உதவித்தொகை ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினையும் என மொத்தம் 12 பயனாளிகளுக்கு ரூ.1,74,100 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, வழங்கினார்.

மேலும், கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற 13ஆவது தேசிய அளவிலான பாரா தடகள விளையாட்டுப் போட்டிகளில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்துகொண்டு விளையாடியதில் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்ற முகம்மது நசீர், வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போட்டியில் மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்ற பொன்மோனிஷா, ஈட்டி எறிதல் போட்டியில் மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்ற பேபிஷாலினி, குண்டு எறிதல் போட்டியில் மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்ற ஷாய் ஜெரிக்கா ஆகியோர்களை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

முன்னதாக பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 549 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. 

பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்கள். மேலும், மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து, முதலமைச்சரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டி தர வேண்டி, இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், காதொலிக் கருவி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 35 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கனிவுடன் கேட்டறிந்தார்.


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், மாவட்ட விளையாட்டு நல அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory