» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு பஸ் மோதி கல்லூரி காவலாளி பலி!
திங்கள் 22, ஜூலை 2024 12:52:09 PM (IST)
முறப்பநாடு அருகே அரசு பஸ் மோதி தனியார் கல்லூரி காவலாளி உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சேர்ந்தவர் முனியாண்டி ஒரு மகன் மோகன் (62), இவர் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தோட்ட பாதுகாவலராக வேலை பார்த்து வருகிறார். இவர் தூத்துக்குடி திருநெல்வேலி ரோட்டில் கடந்து சென்றபோது தூத்துக்குடியில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து முறப்பநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனிதா ராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவரான நாகர்கோவில் கோட்டாரை சேர்ந்த ராஜகோபால் மகன் விஜயன் (47) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.