» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு பஸ் மோதி கல்லூரி காவலாளி பலி!

திங்கள் 22, ஜூலை 2024 12:52:09 PM (IST)

முறப்பநாடு அருகே அரசு பஸ் மோதி தனியார் கல்லூரி காவலாளி உயிரிழந்தார். 

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சேர்ந்தவர் முனியாண்டி ஒரு மகன் மோகன் (62), இவர் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தோட்ட பாதுகாவலராக வேலை பார்த்து வருகிறார். இவர் தூத்துக்குடி திருநெல்வேலி ரோட்டில் கடந்து சென்றபோது தூத்துக்குடியில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து மோதியது. 

இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து முறப்பநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனிதா ராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவரான நாகர்கோவில் கோட்டாரை சேர்ந்த ராஜகோபால் மகன் விஜயன் (47) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Arputham Hospital








Thoothukudi Business Directory