» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பஸ் ஸ்டாப்பில் பெண்ணிடம் 2 பவுன் நகை பறிப்பு : வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு!

திங்கள் 22, ஜூலை 2024 12:35:25 PM (IST)

மெஞ்ஞானபுரம் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் 2 பவுன் தங்கச் செயினை பறித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம்,  மெஞ்ஞானபுரம், நாராயணபுரம் கொட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி சந்தனமாரி  (43), இவர் திருச்செந்தூர் செல்வதற்காக நாராயணபுரம் பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக காத்து நின்றார். அப்போது மோட்டார் பைக்கில் வந்த 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் இவரது கழுத்தில் கிடந்த  2 பவுன் தங்கச் சங்கிலி பறித்துச் சென்று விட்டார். 

இந்த சம்பவம் குறித்து சந்தனமாரி  மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாமா பத்மினி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory