» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பனிமய மாதா தேர்வரும் பாதைக்கு இடையூறு : மேயரிடம் தேர்மாறன் கல்லறை மீட்புக்குழு கோரிக்கை!
சனி 13, ஜூலை 2024 11:21:53 AM (IST)
தூத்துக்குடியில் பனிமய மாதா தேர்வரும் பாதைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்று மேயரிடம் தேர்மாறன் கல்லறை மீட்புக்குழு சார்பாக மனு அளிக்கப்பட்டது.
தூத்தக்குடி மேயர் ஜெகன் பெரியசாமியிடம், துணைமேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலையில், தேர்மாறன் கல்லறை மீட்புக் குழுவினர் அளித்த மனுவில், "தூத்துக்குடி லசால் பள்ளி நிர்வாகத்திடம் இருந்து, சுதந்திரப் போராட்ட மாவீரர் தேர்மாறன் கல்லறையை மீட்டுத்தரவும், பனிமய மாதா தேர்வரும் பாதைக்கு இடையூறு ஏற்படுத்த கட்டிய சுவர், கேலரி மற்றும் அறைகளை இடித்து அகற்றிடவும், சட்டத்துக்குப் புறம்பாக ஆக்கிரமித்து உள்ள இடத்தை மீட்டு, அப்பகுதியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் உறுதி அளித்தார். இந்நிகழ்வில் பரதர் நலத் தலைமைச் சங்கத்தின் பொதுச்செயலாளர் அந்தோணிசாமி, பெல்லா, ஆனந்தி, நெய்தல் எழுத்தாளர் இயக்கத்தின் நெய்தல் அண்டோ, பாத்திமா நகர் ஊர்நலக்கமிட்டி ஆரோக்கியசாமி, ஜவகர், குருஸ்டர்னாந்து மக்கள் பேரவையின் இன்னாசி, குரூஸ் பர்னாந்து மக்கள் இயக்கத்தின் இக்னேஷியஸ், ஜிபின் ஜார்ஜ், காந்திநகர் செவனர், ஸ்னோஸ் காலனி ஜான் பர்னாண்டோ, புதுத்தெரு பெனோ, பூபாலராயர் புரத்தின் எட்வின், பாண்டியபதி அமைப்பின் டேவிட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
TN69Jul 13, 2024 - 01:43:39 PM | Posted IP 162.1*****
தேர் பாதை போல் மாநகரின் முக்கிய சாலைகளுக்கும் சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகள், காம்ப்ளக்ஸ்களை, ஷோரூம் கேலரி முதலியனவும் இடித்தகற்ற ஆணையிட வேண்டும், மதத்திற்காக மட்டும் இன்றி மனிதத்தின் காகவும் துணிந்து துரிதமாக பணியாற்றினால் நன்மை பயக்கும் 🤔🙄🤑🙏
அதுJul 13, 2024 - 03:31:35 PM | Posted IP 162.1*****