» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பச்சிளங்குழந்தைகளுக்கு குடல் அறுவை சிகிச்சை: அரசு மருத்துவர்கள் சாதனை!

செவ்வாய் 25, ஜூன் 2024 12:28:26 PM (IST)



தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குடல் அடைப்புடன் பிறந்த 4 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இது குறித்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார் கூறியது: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த மே மாதம் முதல் இது வரை குடல் அடைப்பு காரணமாக பாதிக்கப்பட்ட 4 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 

இந்தக் குழந்தைகள் பிறந்த 3 நாள்களில் குடல் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் அறுவை சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவர் வெங்கட சரவணன், உதவிப் பேராசிரியர் முத்துக்குமரன் ஆகியோர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அந்தக் குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள், பரிசோதனைக்காக இன்று கொண்டு வந்தனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், 4 குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர் என்றார். 

இந்நிகழ்வில் மருத்துவக் கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, குழந்தைகள் அறுவை சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவர் வெங்கட சரவணன், உதவிப் பேராசிரியர் முத்துக்குமரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory