» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்!
திங்கள் 12, பிப்ரவரி 2024 3:03:49 PM (IST)
திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த அதன் உப கோவிலான வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித் திருவிழா கடந்த 3-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் நாள்தோறும் அம்மன் காலை, மாலை நேரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து கோவில் சேர்தல் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.