» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம்

செவ்வாய் 3, அக்டோபர் 2023 8:08:47 AM (IST)

கோவில்பட்டியில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்ற வளாகம் மற்றும் தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதுதொடர்பாக பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், காந்தி ஜெயந்தி நாளில் அந்த சாலையில் வாழை மரம் நடும் போராட்டத்திற்கு த.மா.கா.வினர் ஏற்பாடு செய்தனர்.

இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்த நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்துவதற்காக த.மா.கா. நகர தலைவர் ராஜகோபால் உள்ளிட்டோர் கையில் வாழை மரக்கன்றுடன் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வாழை மரக்கன்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் தாலுகா அலுவலக வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital





Thoothukudi Business Directory