» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக நிர்வாகிகள் அதிமுகவில் ஐக்கியம்: எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் இணைந்தனர்!

திங்கள் 2, அக்டோபர் 2023 3:46:27 PM (IST)



சிவகளை பரம்பு திமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பரம்பை சார்ந்த திமுக கிளை நிர்வாகிகள் சுரேஷ், ஜெபமாலை, சன்னியாசிமுத்து, ஐயப்பன், பாஸ்கர், பாலசுப்பிரமணியன் ஆகியோர் அக்கட்சியில் இருந்தி விலகி அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று நேற்று காலை பண்டாரவிளை அதிமுக அலுவலகத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதனை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். 

அவர்களை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அதிமுக கரை வேஷ்டி அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வின் போது ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் சி.காசிராஜன், சிவகளை பரம்பு அதிமுக நிர்வாகிகள் ரமேஷ், பழனி, கணேசன், பரமசிவன் ஆகியோர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory