» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு : தூத்துக்குடியில் பரபரப்பு!

திங்கள் 2, அக்டோபர் 2023 10:31:11 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை போலிசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி டீச்சர்ஸ் காலனி 3வது தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (73). தூத்துக்குடியில் உள்ள உரத் தொழிற்சாலையில் உதவி மேனேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் இரவு இவரை வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ.10ஆயிரம் பணம், 4 கிராம் கம்மல் ஆகிவற்றை திருடி சென்று விட்டார்களாம். 

இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் செல்வராஜ் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் அரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா  பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 


மக்கள் கருத்து

மாமன்னன்Oct 4, 2023 - 06:15:53 PM | Posted IP 172.7*****

ஆரம்பிச்சிட்டாங்களா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory