» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சென்னை செல்லும் ஆசையில் வீட்டை விட்டு வெளியேறிய 3 சிறுவா்கள் மீட்பு!
திங்கள் 2, அக்டோபர் 2023 8:26:24 AM (IST)
சென்னை செல்லும் ஆசையில் வீட்டை விட்டு வெளியேறிய 3 சிறுவா்களை மதுரை ரயில்வே போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி பெரியான்விளையைச் சோ்ந்த தம்பதி சுபா முருகன்-பரிமளாதேவி. இவா்களது குழந்தைகள் சுஜன் (14) , ராஜா ஹரிஷ் (13), கனிஷ்கா (12). மூவரும் பள்ளி மாணவா்கள். தற்போது பள்ளி விடுமுறை என்பதால், கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்தனா். வேலைக்குச் சென்ற பரிமளாதேவி, மாலை வீட்டிற்கு திரும்பிய போது குழந்தைகளை காணவில்லை.
இதுகுறித்த தகவலின் பேரில் ஆறுமுகனேரி போலீசார் விசாரணை நடத்தினர். அருகில் உள்ளவா்களிடம் விசாரித்த போது, மதியம் பேருந்தில் 3 பேரும் ஏறிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, குறிப்பிட்ட பேருந்து நடத்துநரிடம் விசாரித்ததில், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் 3 பேரும் இறங்கி விட்டதாக தகவல் தெரிவித்தாா். இதையடுத்து போலீசார், ரயில்வே போலீசாரை தொடா்பு கொண்டனா்.
சென்னை செல்லும் முத்துநகா் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே போலீசார் தேடியபோது, சிறுவா்கள் அதில் பயணம் செய்துகொண்டிருந்தது தெரியவந்தது. அவா்கள் மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனா். பின்னா் ஆறுமுகனேரி போலீசார் மதுரைக்கு விரைந்து குழந்தைகளை மீட்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.
சில நாள்களுக்கு முன்பு பெற்றோருடன் சென்னையில் உள்ள உறவினா் வீட்டிற்கு இச்சிறுவா்கள் சென்று வந்துள்ளனா். அந்த நினைப்பில் சென்னை செல்லும் ஆசையில் 3 பேரும் வீட்டை விட்டுச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











ஓட்டு போட்ட முட்டாள்Oct 2, 2023 - 11:25:49 AM | Posted IP 162.1*****