» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் விபத்தில் கொத்தனார் பரிதாப சாவு!

சனி 3, ஜூன் 2023 10:56:04 AM (IST)

குரும்பூர் அருகே பைக் விபத்தில் கொத்தனார் பரிதாபமாக உயிரிழந்தார். 

நெல்லை வீரமாணிக்கபுரத்தைச் சேர்ந்தவர் சுடலை மகன் செல்வகுமார் (44).  கொத்தனார். இவர் வேலை தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே பணிக்க நாடார் குடியிருப்பு கிராமம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது ஒருவர் சாலையின் குறுக்கே சென்றுள்ளார்.

இதனால் செல்வகுமார் சடன் பிரேக் போட்டுள்ளார்.இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து குரும்பூர் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory