» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
சனி 3, ஜூன் 2023 10:50:14 AM (IST)
காயல்பட்டினத்தில் கோவில் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் உள்ள சுடலைமாடசாமி கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடித்துவிட்டு கதவை பூட்டி விட்டு சென்றுள்ளனர். நேற்று காலை வந்து பார்த்தபோது கதவில் உள்ள பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்தன, மேலும் கோவிலுக்குள் இருந்த ரூ.20ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் திருடுபோயிருந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகி மூர்த்தி (30) என்பவர் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.