» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

சனி 3, ஜூன் 2023 10:50:14 AM (IST)

காயல்பட்டினத்தில் கோவில் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் உள்ள சுடலைமாடசாமி கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடித்துவிட்டு கதவை பூட்டி விட்டு சென்றுள்ளனர். நேற்று காலை வந்து பார்த்தபோது கதவில் உள்ள பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்தன, மேலும் கோவிலுக்குள் இருந்த ரூ.20ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் திருடுபோயிருந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகி மூர்த்தி (30) என்பவர் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அக்.18ல் காளி வேட ஊர்வலம்!

வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:46:08 PM (IST)

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory