» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
உணவுப் பகுப்பாய்வுக் கூட வாகனம்:ஆட்சியர் தொடங்கி வைத்தார்!!
வியாழன் 1, ஜூன் 2023 3:15:47 PM (IST)
விளாத்திகுளத்தில் உணவுப் பகுப்பாய்வுக் கூட வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் இன்று உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில், உணவு கலப்படம் மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள், உணவு வணிகர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் உணவுப் பகுப்பாய்வுக் கூட வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவக்குமார் (புதூர் மற்றும் விளாத்திகுளம்) ஜோதிபாசு (கோவில்பட்டி), பகுப்பாய்வாளர்கள், நுகர்வோர் சங்கப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.