» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
எச்சரிக்கை விளக்கு இல்லாததால் விபத்துக்கள் அதிகரிப்பு - தூத்துக்குடியில் அவலம்!!
வியாழன் 1, ஜூன் 2023 11:48:40 AM (IST)
தூத்துக்குடி தெர்மல் நகர் சந்திப்பு பகுதியில் விபத்துக்களை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலைய குடியிருப்பு, காதர்மீரான் நகர் சந்திப்பு எப்போதும் மக்கள் கடக்க கூடிய பகுதியாகும். இந்த பகுதியில் எச்சரிக்கை விளக்குகள், சாலை விளக்குகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று சாலையோரம் நின்ற லாரி மீது பைக் மோதி அனல்மின் நிலைய ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் திறந்து உள்ளதால் லாரி ஓட்டுநர்கள் ஆங்காங்கே லாரிகளை நிறுத்திவிட்டு மதுக்கடைக்கு சென்று வருவதால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடியும், விபத்துக்களும் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும் எச்சரிக்கை விளக்குகள் இல்லாததால் அதிவேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குவதாக கூறப்படுகிறது.
கடந்த காலத்தில் டி.எஸ்.பியாக பிரகாஷ் இருந்தபோது அப்பகுதியில் எச்சரிக்கை விளக்குகள் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். தற்போது அதன் கம்பங்கள் மட்டுமே உள்ளது. விளக்குகள் இல்லை. இப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவில்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களில் ஒருவன்Jun 1, 2023 - 02:54:08 PM | Posted IP 172.7*****