» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி : எம்எஸ்எம் அணி வெற்றி

வியாழன் 1, ஜூன் 2023 8:44:23 AM (IST)



தூத்துக்குடி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் சங்கரபேரியில் உள்ள எஸ்.கே.சி மற்றும் ஜி.எஸ்.சி.சி மைதானத்தில் நடைபெற்றது. 

இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மொத்தம் 10 கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன. லீக் சுற்று முறையில் நடைபெறுகிற இந்த போட்டிகளில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டித் தொடரின் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் எம்எஸ்எம் அணி மற்றும் ஏடிசிசி அணியினர்  மோதினர். போட்டியினை 14 வது வார்டு திமுக வட்ட செயலாளர் காளி துரை, முன்னாள் எஸ்.கே.சி அணி கேப்டன் ஆனந்த் ஜாண்டி ஆகியோர் துவக்கி வைத்தனர். 

எம்எஸ்எம்  அணி முதல் பரிசையும், ஏடிசிசி அணியினர் 2வது பரிசையும் வென்றனர்.  வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக 15ஆயிரம், இரண்டாம் பரிசு 10ஆயிரம், மூன்றாம் பரிசு 5ஆயிரம்நான்காம் பரிசு 3500 வழங்கப்பட்டது.  பரிசளிப்பு விழாவில் தொழிலதிபர்கள் பெர்வின், பிரதாப் துரைராஜ், அன்டெணி கிஷோர், வக்கீல் அர்ஜூன், திமுக 14வது வார்டு வட்ட செயலாளர் பா.காளிதுரை, மாப்பிள்ளையூரணி கூட்டுறவு வங்கி இயக்குநர் அந்தோணி தனுஷ் பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

SunderJun 3, 2023 - 12:30:47 AM | Posted IP 172.7*****

10 team than

Arul SelvamJun 1, 2023 - 12:37:52 PM | Posted IP 162.1*****

Superrr

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory