» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மேலூர் ரயில் நிலையம் அருகில் புதியசாலை : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
புதன் 31, மே 2023 2:43:46 PM (IST)

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் வரும் பயணிகளின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கே.வி.கே நகர் கீழ்ப்பகுதியில் இரண்டு சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி. கீதாஜீவன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேலூர் ரயில் நிலையத்தை இன்று பார்வையிட்டார். அந்த ரயில் நிலையத்தில் வந்து இறங்கும் பயணிகள் செல்வதற்காக ரயில் நிலையத்தின் தென்பகுதியில் இருந்து பயணிகள் இறங்குவதற்கு வசதியாக புதிய படிக்கட்டுகள் அமைக்கவும், பொதுமக்கள் ரயில் நிலையத்திற்கு வந்து செல்வதற்கு வசதியாக கே.வி.கே நகர் பகுதியில் கிழமேல் மற்றும் தென் வடல் சாலைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
ஆய்வின் போது, ரயில் தென்னக ரயில்வே துணை திட்ட பொது மேலாளர் சரவணன், தூத்துக்குடி ரயில்வே மேலாளர், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசே கரன் உட்பட பலர் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










