» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் துறைமுக ஊழியர் பலி!

புதன் 31, மே 2023 12:14:45 PM (IST)

தூத்துக்குடி பைக் - லாரி மோதிய விபத்தில் துறைமுக ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சிப்பிகுளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் லாம்பெட் மகன் ஷெல்டன் (45) . இவர் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் கேங்மேனாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு தனது பைக்கில் கிரீன் கேட் உள்ளே நிலக்கரி கப்பல்கள் நிற்கும் தளத்திற்கு சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதி கீழே விழுந்தார். 

அப்போது லாரியின் பின் டயர், ஷெல்டன் மீது ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து தெர்மல் நகர் போலீசார் அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ் வழக்குப் பதிந்து, லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அக்.18ல் காளி வேட ஊர்வலம்!

வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:46:08 PM (IST)

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory