» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடலோர கிராம பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்!!
செவ்வாய் 30, மே 2023 9:08:02 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட கடலோர கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் கலந்துரையாடினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (30.05.2023) தூண்டில் மாணவர் இயக்கம் சார்பில் நடைபெற்ற கடலோர கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடி, அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், பள்ளி மாணவ, மாணவியர்களின் ஆளுமை திறனை மேம்படுத்தும் நோக்கில், தூண்டில் மாணவர் இயக்கம் கடலோர பள்ளி மாணவ, மாணவியர் (9ஆம் வகுப்பு செல்லும் மாணவ, மாணவியர்கள்)களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு ஆளுமை பயிற்சி வழங்குவதோடு, அரசுப்பணியின் முக்கியத்துவம் குறித்தும், அரசுத்துறைகளின் வகைகள், ஒவ்வொரு அரசுத்துறையின் செயல்பாடுகள் குறித்தும், அரசுப் பணியில் பணியாற்ற வேண்டுமென்றால் அதற்காக வழிமுறைகள் மற்றும் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித்தேர்வுகள் குறித்தும், அந்த போட்டித்தேர்வுகளுக்கான கல்வித்தகுதி, போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடி, ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தின் சிறப்புகள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டமைப்புகள், தங்களது கிராமங்களில் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலகங்கள் மற்றும் பிரதிநிதிகள், மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி குறித்தும், நவீன தொழில்நுட்பவியல் வளர்;ச்சி குறித்தும், தூத்துக்குடி மாவட்டத்தின் தொன்மையான நாகரிகம் குறித்தும் அதாவது, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை போன்ற இடங்களில் நமது முன்னோர்கள் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்தற்கான தொல்பொருட்கள் கிடைக்கப்பெற்றிருக்கிறது என்றும்,
மாணவர்கள் ஒவ்வொருவரும் நமது வரலாற்றை படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் மாணவ, மாணவியர்களுக்கு அறிவுறுத்தினார்கள். மாணவர்கள் பள்ளி பருவத்தில் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும், அன்றாட நடப்பு நிகழ்வுகளை அறிந்துகொள்ள வேண்டும். தினசரி செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். இதன் வாயிலாக பொதுஅறிவை வளர்த்துக்கொள்ள முடியும். போட்டித்தேர்வுகளில் மிகவும் முக்கிய அங்கமாக இருப்பது இந்த பொதுஅறிவு. ஆகையால், மாணவர்கள் பள்ளிப் பருவத்திலிருந்தே நூலகம் சென்று புத்தகம்; வாசிப்பது, செய்தித்தாள் வாசிப்பது, அன்றாட நடப்பு நிகழ்வுகளை அறிந்துகொள்வது போன்ற நல்ல பழக்க வழக்கங்களை தவறாது கடைபிடித்தால் வாழ்க்கை வெற்றி நிச்சயம் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்தார்கள்.
இன்று நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்;ச்சியில்; 11 கடலோர கிராமங்களைச் சேர்ந்த 50 பள்ளி மாணவ, மாணவியர்களும், 15 தன்னார்வ தொண்டர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், ஒருங்கிணைப்பாளர் ரா.பி. சகேஷ் சந்தியா, அரசு அலுவலர்கள் மற்றும் தூண்டில் மாணவர் இயக்கம் கடலோர கிராமங்களைச் சேர்ந்;த பள்ளி மாணவ, மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை சார்பில் இருதய விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெள்ளி 29, செப்டம்பர் 2023 9:16:24 PM (IST)

பெண் குழந்தைகளைக் காப்போம் பயிலரங்கம் : எஸ்பி துவக்கி வைத்தார்!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:37:35 PM (IST)

தூத்துக்குடியில் செவிலியர் கல்லூரி தொடங்க வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் கோரிக்கை
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:29:00 PM (IST)

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:24:58 PM (IST)

அரியநாயகிபுரம் பள்ளியில் புதிய வகுப்பறைகள் அடிக்கல் நாட்டு விழா!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:20:28 PM (IST)

தூத்துக்குடியில் அக்.18ல் காளி வேட ஊர்வலம்!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:46:08 PM (IST)
