» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மணிமேகலை விருதுபெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 30, மே 2023 4:27:42 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் மணிமேகலை விருதுக்கு தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து ஆட்சியா் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் சுயஉதவிக் குழுக்கள், பஞ்சாயத்து கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் ஆகியவற்றுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது. ஆகவே 2022-2023 ஆம் ஆண்டுக்கான விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை நகா்ப்புறப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் நகராட்சி, பேரூராட்சி சமுதாய அமைப்பாளா்களிடமும், ஊரக பகுதிகளில் உள்ளவா்கள் வட்டார இயக்க மேலாளா்களிடமும் 25.06.2023 தேதிக்குள் வழங்க வேண்டும்.
மேலும், தகுதியான கிராமப்புற மற்றும் நகர்ப்புற மகளிர் சுயஉதவிக்குழு, ஊராட்சிஅளவிலான குழு கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புசங்கம், நகர்ப்புற அளவிலான கூட்டமைப்பு மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகள் கிராமபகுதிக்கு சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், நகர்ப்புற பகுதிக்கு மகளிர் திட்ட அலுவலகத்திலும் விண்ணப்பங்களை பெற்று விருதிற்கான விபரங்களை முழுமையாக பூர்த்தி செய்து 25.06.2023 க்குள் அனுப்பிட வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி : மகளிர் திட்டம், மாவட்ட ஆட்சியரகம் , 2வது தளம், கோரம்பள்ளம், தூத்துக்குடி 628101. தொலைபேசிஎண் 0461-2341282. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










