» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கல்லூரி மாணவி தற்கொலை : போலீசார் விசாரணை
செவ்வாய் 30, மே 2023 11:09:49 AM (IST)
தூத்துக்குடியில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி சக்திவிநாயகர் புரத்தைச் சேர்ந்தவர் ரவிகுமார் மகள் அகிலா (19). இவர் தூத்துக்குடியில் உள்ள பெண்கள் கல்லூரியில் பிஏ 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை 5 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அம்மா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
இதனால் அவர் பாட்டியின் பராமரிப்பில் அவர் வளர்ந்து வந்துள்ளார். மேலும் தாயின் மரணத்தை நினைத்து அடிக்கடி அகிலா மனம் வருந்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.