» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கல்லூரி மாணவி தற்கொலை : போலீசார் விசாரணை

செவ்வாய் 30, மே 2023 11:09:49 AM (IST)

தூத்துக்குடியில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி சக்திவிநாயகர் புரத்தைச் சேர்ந்தவர் ரவிகுமார் மகள் அகிலா (19). இவர் தூத்துக்குடியில் உள்ள பெண்கள் கல்லூரியில் பிஏ 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை 5 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அம்மா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். 

இதனால் அவர் பாட்டியின் பராமரிப்பில் அவர் வளர்ந்து வந்துள்ளார். மேலும் தாயின் மரணத்தை நினைத்து அடிக்கடி அகிலா மனம் வருந்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory