» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாப்பிள்ளையூரணியில் கிராம சபை கூட்டம்
புதன் 22, மார்ச் 2023 2:52:51 PM (IST)

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிலுவைப்பட்டி ஆர்சி பள்ளி வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் வகித்தார். கூட்டத்தில் ஜல் ஜீவன் திட்டம், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் திருநங்கைகள் உள்ளிட்ட இப்பகுதியை சேர்ந்த பலருக்கும் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன்சங்க செயலாளர் பாலமுருகன், மின்வாரிய இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரை, அதிகாரிகள் ரெங்கதுரை, வாசு, மாப்பிள்ளையூரணி ஆரம்பசுகாதார நிலைய அலுவலர் முகம்மது ஆசீப், கூட்டுறவு ரேஷன்கடை அலுவலர் பிரபாகர், தூத்துக்குடி ஊராட்;சி ஒன்றிய பொதுப்பணித்துறை கட்டிட மேற்பார்வையாளர் முத்துராமன், ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கபாண்டி, தங்கமாரிமுத்து, உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










