» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பள்ளி மாணவி உட்பட 2பேர் மாயம்!
புதன் 22, மார்ச் 2023 10:50:02 AM (IST)
தூத்துக்குடியில் பள்ளி மாணவி உட்பட 2பேர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகில் உள்ள புதுக்கோட்டை அல்லிக்குளம் முருகன் நகரை சேர்ந்தவர் நட்டார்கனி இவரது மகள் நவீனா இன்பா (14), இவர் தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 20 ஆம் தேதி பள்ளிக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தாயார் கலா புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் பெயரில் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
கல்லூரி மாணவி
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தலைவன் வடலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் மகள் பவித்ரா (20), இவர் காயல்பட்டினத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 20 ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ஆனந்தராஜ் ஆத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி 24வது வார்டு தார் சாலை எங்கே? அமமுக கேள்வி!
திங்கள் 2, அக்டோபர் 2023 5:20:22 PM (IST)

கோரிக்கைகளை மக்கள் பிரதிநிதிகளிடம் தெரிவிக்க வேண்டும் : அமைச்சர் பி.கீதாஜீவன்
திங்கள் 2, அக்டோபர் 2023 4:56:15 PM (IST)

தூத்துக்குடியில் ஓடும் பஸ்சில் ஒருவர் திடீர் மரணம்!
திங்கள் 2, அக்டோபர் 2023 4:19:48 PM (IST)

வானிலை மையம் எச்சரிக்கை : தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!
திங்கள் 2, அக்டோபர் 2023 4:10:37 PM (IST)

திமுக நிர்வாகிகள் அதிமுகவில் ஐக்கியம்: எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் இணைந்தனர்!
திங்கள் 2, அக்டோபர் 2023 3:46:27 PM (IST)

கலைஞர் நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி: அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கினார்!
திங்கள் 2, அக்டோபர் 2023 3:34:48 PM (IST)

சிவகுமார் சிMar 23, 2023 - 11:38:49 AM | Posted IP 162.1*****