» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சப்-இன்ஸ்பெக்டர் காலமானார் : காவல்துறை சார்பில் இறுதி மரியாதை!
புதன் 22, மார்ச் 2023 7:31:09 AM (IST)

தூத்துக்குடியில் உடல்நலக்குறைவால் இறந்த சப்-இன்ஸ்பெக்டர் உடலுக்கு போலீசார் மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் கிருஷ்ணமூர்த்தி (56). இவர் கடந்த 1989-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து ஆயுதப்படையில் பணிபுரிந்தார். கடந்த 2014-ம் ஆண்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வந்தார். இந்த நிலையில் உடல்நலக்குறைவால் அவர் நேற்று முன்தினம் இறந்தார். அவரது உடல், சொந்த ஊரான சாமிநத்தத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது.
அவரது இறுதி நிகழ்ச்சியில் ஆயுதப்படை டிஎஸ்பி (பொறுப்பு) ஜெயராஜ் தலைமையிலான போலீசார் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்தனர். தொடர்ந்து போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனைமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சங்கரலிங்கம், போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேஷ், வேல்முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நங்கையர்மூர்த்தி மற்றும் போலீசார் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










