» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கஞ்சா வழக்கில் 2பேர் கைது : 2 வாகனங்கள் பறிமுதல்

செவ்வாய் 21, மார்ச் 2023 2:54:51 PM (IST)

தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா  வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். 1 கிலோ 400 கிராம் கஞ்சா மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது..

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு மேற்பார்வையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் ஜூடி மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் இருசக்கர வாகனங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

இதில் அவர்கள் தூத்துக்குடி தாளமுத்துநகர் பாலதண்டாயுத நகரை சேர்ந்தவர்களான தமிழரசன் மகன் ஜெயேந்திரன் (24) மற்றும் முத்துப்பாண்டி மகன் ரமேஷ் கண்ணன் (20) ஆகியோர் என்பதும் அவர்கள் அப்பகுதியில் விற்பனைக்காக இரு சக்கர வாகனங்களில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 1 கிலோ 400 கிராம் கஞ்சா மற்றும் 2 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ஜெயேந்திரன் மீது ஏற்கனவே தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 4 வழக்குகளும், ரமேஷ் கண்ணன் மீது கொலை வழக்கு உட்பட 5 வழக்குகளும் உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory