» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்லூரி மாணவி திடீர் மாயம்: போலீஸ் விசாரணை!

செவ்வாய் 21, மார்ச் 2023 11:26:49 AM (IST)

திருச்செந்தூர் அருகே கல்லூரி மாணவி ஒருவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள ஆலந்தலை, தெற்கு தெருவைச் சேர்ந்தவர் இருதயராஜ். இவரது மகள் ரோசிகா (19), இவர் காயல்பட்டனத்தில் உள்ள கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை கல்லூரிக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து இருதயராஜ் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory