» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது!
செவ்வாய் 21, மார்ச் 2023 11:22:04 AM (IST)
தூத்துக்குடியில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது தூத்துக்குடி அக்ஸார் பெயிண்ட் ஜங்சன் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.
இதில் அவர் தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் மகன் தீபன்ராஜ் (24) என்பதும் அவர் அப்பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் தீபன்ராஜை கைது செய்து அவரிடமிருந்த 380 கிராம் கஞ்சா மற்றும் ரூ.2,000 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட தீபன்ராஜ் மீது ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் உட்பட 4 வழக்குகள் உள்ளது..