» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தனியார் ஆலையில் நன்கொடை கேட்டு மிரட்டிய பாஜக நிர்வாகி கைது!
வெள்ளி 17, மார்ச் 2023 11:33:27 AM (IST)
சாத்தான்குளம் அருகே தனியார் ஆலையில் நன்கொடை கேட்டு மிரட்டியதாக பாஜக மாநில இளைஞரணி செயலாளர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள வேலவன் பகுதியில் தனியார் கிரஷர் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு நேற்று மாலை பாஜக மாநில இளைஞரணி செயலாளர் பூபதி உள்ளிட்டோர் சென்று நன்கொடை கேட்டார்களாம். அப்போது பணியில் இருந்த மேலாளர், கிரஷர் ஆலை நிறுவனர் தற்போது இல்லாததால் பிறகு வருமாறு கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த பாஜகவினர் கொலை மிரட்டல் விடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் கிரஷர் ஆலை முன்பாக தங்களது சொகுசு கார்கள் நிறுத்தி லாரிகளை வழிமறித்துள்ளனர். இதையடுத்து புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி, பாஜக மாநில இளைஞரணி செயலாளர் பூபதியை கைது செய்து சொகுசு கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
ராஜாMar 17, 2023 - 01:18:14 PM | Posted IP 162.1*****
மகிழ்ச்சியா பள்ளி நேரத்தில் மழை
உள்ளMar 17, 2023 - 01:02:29 PM | Posted IP 162.1*****
வெச்சு புட்டத்தை கிழித்தால் சரி வரும்
இந்தியன்Mar 17, 2023 - 12:50:40 PM | Posted IP 162.1*****
இதே மாதிரி பிச்சைக்கார அரசியல்வாதிகளால் பாஜகக்கு அவமானம்.
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பைக் விபத்தில் நிதி நிறுவன அதிபர் பலி
சனி 3, ஜூன் 2023 3:47:18 PM (IST)

உச்சநீதிமன்ற நீதிபதி தூத்துக்குடி வருகை: ஆட்சியர் வரவேற்பு
சனி 3, ஜூன் 2023 3:36:33 PM (IST)

ஒடிசா இரயில் விபத்து: தூத்துக்குடியில் அஞ்சலி!
சனி 3, ஜூன் 2023 3:04:03 PM (IST)

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை : ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்
சனி 3, ஜூன் 2023 11:35:40 AM (IST)

கலைஞர் 100வது பிறந்தநாள் மரக்கன்றுகள் நடும் திட்டம்: மேயர் தொடங்கி ஜெகன் பெரியசாமி வைத்தார்!
சனி 3, ஜூன் 2023 11:23:56 AM (IST)

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் மரணம்? போலீஸ் விசாரணை
சனி 3, ஜூன் 2023 11:02:02 AM (IST)

JAI HINDMar 17, 2023 - 03:24:26 PM | Posted IP 162.1*****