» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கணவர் இறந்த 3-வது நாளில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

ஞாயிறு 12, மார்ச் 2023 8:08:17 AM (IST)

சாத்தான்குளம் அருகே கணவர் இறந்த 3-வது நாளில் அவரது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தச்சன்விளை கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (60) விவசாயி. இவரது மனைவி கோமதி (55). இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவரும் சென்னையில் இருந்து வந்தனர். பெருமாளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சொந்த ஊருக்கு வந்தனர். கடந்த 9-ந் தேதி உடல்நலம் பாதிப்பு காரணமாக பெருமாள் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது இறுதி சடங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த நிலையில் கணவரின் பிரிவை தாங்க முடியாமல் கோமதி மனவேதனையில் இருந்து வந்தார். கணவர் இறந்த 3-வது நாளான நேற்று கோமதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்து அவரது மகன்கள், மகள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தட்டார்மடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கோமதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இன்ஸ் பெக்டர் பவுலோஸ் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory