» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விபத்தில் காயமடைந்த சிறுவன் பரிதாப சாவு

ஞாயிறு 12, மார்ச் 2023 7:47:29 AM (IST)

வல்லநாடு அருகே பைக் விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான்.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள நாணல்காடு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கி பாண்டி மகன் இசக்கிமுத்து (12). இவன் ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 6-ந் தேதி இசக்கிமுத்து நாணல்காடு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றான். அப்போது சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த இசக்கிமுத்துவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இசக்கிமுத்து நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory