» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டிரான்ஸ்பார்மரில் ஏறி லாரி டிரைவர் தற்கொலை : குடும்பத் தகராறில் விபரீத முடிவு!

சனி 11, மார்ச் 2023 11:10:23 AM (IST)

ஆறுமுகநேரி அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் டிரான்ஸ்பார்மரில் ஏறி லாரி டிரைவர் தற்கொலை செய்துக்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி அருகேயுள்ள பேயன்விளை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் தாமஸ்துரை (25) லாரி டிரைவர். இவருக்கு நேற்று மனைவியுடன் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த தாமஸ் துரை, தனது வீட்டின் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி, மின் வயரை பிடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து

M முத்துMar 11, 2023 - 03:21:58 PM | Posted IP 162.1*****

அனல் மின் நிலையங்களில் குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களை அதிகாரிகளின் அதிகாரம்ஆணவப் போக்கு காரணமாக அதிகமான தொழிலாளிகள் மன உளைச்சல் அடைகின்றார்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory