» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் புதுப்பெண் மர்ம மரணம்: தாயார் புகார் - சார் ஆட்சியர் விசாரணை

சனி 11, மார்ச் 2023 10:35:37 AM (IST)

தூத்துக்குடியில் திருமணமான 5 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சார் ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் ஜீவா நகரைச் சேர்ந்தவர் ரோமில்டன். மீனவர். இவரது மனைவி ஜேசு திலகா (26). இந்த தம்திபயருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. ஜேசு திலகா தற்போது 2 மாத கர்ப்பினியாக உள்ளார். இதனால் அவரது தாயார் செல்லம்மாள் தினமும் மகளை பார்க்க வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று அவர் வந்தபோது ஜேசு திலகா தனது அறையில் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் அவர் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் டவுன் டிஎஸ்பி சத்தியராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான 5 மாதங்களில் பெண் இறந்துள்ளதால், சம்பவம் குறித்து சார் ஆட்சியர் மேல் விசாரண நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory