» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வடமாநில தொழிலாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை : எஸ்பி அறிவுறுத்தல்!
ஞாயிறு 5, மார்ச் 2023 7:28:31 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லாமொழி பகுதியில் அனல்மின் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு சுமார் 4000 ற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேற்படி வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வரும் அனல்மின் நிலைய கட்டுமான பகுதிக்கு இன்று (05.03.2023) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் மற்றும் அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர்சிங் ஆகியோர் நேரடியாகச் சென்று அங்கு பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களிடம் அவர்களுக்கு புரிவதற்காக இந்தி மொழியிலேயே கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மேற்படி காவல் அதிகாரிகள் பேசுகையில், தற்போது வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியை பார்த்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும், அது தமிழ்நாட்டில் நடைபெறவில்லை என்றும், தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகிய எனது தலைமையில் தங்கள் பகுதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போலீசார் உட்பட அனைத்து காவல் நிலைய போலீசாரும் உங்களது பாதுகாப்பிற்கு எந்த நேரத்திலும் உள்ளோம், நீங்கள் உங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்று வர அச்சப்படத் தேவையில்லை,
உங்கள் பாதுகாப்பிற்காக எப்பொழுதும் காவல்துறை உள்ளது, மேலும் உங்கள் பணியின் போது விதிமுறைகளின் படி பாதுகாப்பு உபகரணங்களை கையாண்டு பணிபுரியுமாறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் மற்றும் அம்பாசமுத்திரம் காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர்சிங் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வின் போது சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் அருள் உட்பட காவல்துறையினர் மற்றும் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் புகாரி, திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உச்சநீதிமன்ற நீதிபதி தூத்துக்குடி வருகை: ஆட்சியர் வரவேற்பு
சனி 3, ஜூன் 2023 3:36:33 PM (IST)

ஒடிசா இரயில் விபத்து: தூத்துக்குடியில் அஞ்சலி!
சனி 3, ஜூன் 2023 3:04:03 PM (IST)

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை : ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்
சனி 3, ஜூன் 2023 11:35:40 AM (IST)

கலைஞர் 100வது பிறந்தநாள் மரக்கன்றுகள் நடும் திட்டம்: மேயர் தொடங்கி ஜெகன் பெரியசாமி வைத்தார்!
சனி 3, ஜூன் 2023 11:23:56 AM (IST)

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் மரணம்? போலீஸ் விசாரணை
சனி 3, ஜூன் 2023 11:02:02 AM (IST)

பைக் விபத்தில் கொத்தனார் பரிதாப சாவு!
சனி 3, ஜூன் 2023 10:56:04 AM (IST)
