» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மறைவு : காவல் துறையினர் அஞ்சலி
புதன் 8, பிப்ரவரி 2023 3:06:15 PM (IST)

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இருதயராஜ் இன்று உடல் நலைக்குறைவால் காலமானார்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் இருதயராஜ் (64) 1986 ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் சிறப்பாக பணியாற்றி பதவி உயர்வு பெற்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து கடந்த 2018ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவருக்கு மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர்.
இருதயராஜ் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். அன்னாரது இறுதிச்சடங்கு கோவில்பட்டி முத்தையம்மாள் தெருவில் உள்ள அவரது வீட்டில் வைத்து நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சி. சைலேந்திர பாபு சுற்றறிக்கை குறிப்பாணையின்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி மாவட்ட காவல்துறை சார்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) பத்மாவதி தலைமையில் 16 போலீசார் இருதயராஜ் அவர்களது உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்வில் உதவி ஆய்வாளர் ரவீந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மாரியப்பன், காளிபாண்டி, வீரராகவன், சங்கர நாராயணன், சேர்மராஜ், , ஹேமா உட்பட தலைமைக் காவலர்கள், காவலர்கள் என 16 போலீசார் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஓய்வு பெற்ற காவலர் பொதுநலச் சங்கம் சார்பாக அதன் தலைவர் ஜெபமணி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிராம சபைக் கூட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் - ஆட்சியர் உறுதி!!
புதன் 22, மார்ச் 2023 3:09:51 PM (IST)

தூத்துக்குடியில் டிரைவரை தாக்கி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது
புதன் 22, மார்ச் 2023 3:01:56 PM (IST)

மாப்பிள்ளையூரணியில் கிராம சபை கூட்டம்
புதன் 22, மார்ச் 2023 2:52:51 PM (IST)

தூத்துக்குடி பெண்ணை திருமணம் செய்து மோசடி : கல்யாண மன்னன் கைது!
புதன் 22, மார்ச் 2023 12:34:40 PM (IST)

கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து
புதன் 22, மார்ச் 2023 12:27:58 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்கள் ஏலம்: மார்ச் 29ம் தேதி நடக்கிறது - எஸ்பி தகவல்!!
புதன் 22, மார்ச் 2023 11:04:48 AM (IST)
