» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவிலில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

புதன் 8, பிப்ரவரி 2023 10:23:04 AM (IST)

தூத்துக்குடி அருகே கோவிலில் பூட்டை உடைத்து நகை மற்றும் உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி அருகே கீழத்தட்டப்பாறை கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று அம்மன் பொட்டுத் தாலி, உண்டியல் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா சங்கர் என்பவர் தட்டப்பாறை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சத்தியபாமா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory