» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஸ்டூடியோ பூட்டை உடைத்து ரூ.2லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை

புதன் 8, பிப்ரவரி 2023 10:11:39 AM (IST)

தூத்துக்குடியில் ஸ்டுடியோ பூட்டை உடைத்து ரூ.2லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி தெற்கு சங்கரப்பேரியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மகேஷ் (43), இவர் தூத்துக்குடி - எட்டையாபுரம் ரோடு, மாப்பிளையூரணி விலக்கு ரோட்டில் ஸ்டுடியோ நடத்தி வருகிறார். கடந்த 1ஆம் தேதி இரவு ஸ்டுடியோவை பூட்டிவிட்டு மறுநாள் காலை வந்து பார்த்தபோது பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த கேமரா லென்ஸ், லைட் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடுபோயிருந்தது. இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்தில் மகேஷ் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

aandaFeb 8, 2023 - 10:42:27 AM | Posted IP 162.1*****

parambari. ajith fans

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital




Thoothukudi Business Directory