» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொலை வழக்கில் தொடர்புடையவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!
செவ்வாய் 7, பிப்ரவரி 2023 11:24:44 AM (IST)
கோவில்பட்டியில் கொலை வழக்கு மற்றும் நோய் பிரச்சனையில் அவதிப்பட்டு வந்த முதியவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பங்களா தெருவைச் சேர்ந்தவர், முத்தையா மகன் கருப்புசாமி (75). இவர் தனது உறவினரை கம்பியால் தாக்கி கொலை செய்ததாக நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், இவர் சொரியாசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளார். இவரது மனைவி ராஜலட்சுமி சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளது.
மேற்படி பிரச்சினைகள் காரணமாக வாழ்கையில் வெறுப்படைந்த கருப்பசாமி கோவில்பட்டி நல்லி ரயில் நிலையம் அருகே சென்னை - திருச்செந்தூர் விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவ குறித்து அவரது மருமகன் காமராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி இருப்புப்பாதை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தி.மு.க. என்றாலே வன்முறை கட்சி : எச்.ராஜா பேட்டி
புதன் 22, மார்ச் 2023 7:34:24 AM (IST)

தூத்துக்குடியில் மறைந்த சப்-இன்ஸ்பெக்டர் உடலுக்கு காவல்துறையினர் அஞ்சலி!
புதன் 22, மார்ச் 2023 7:31:09 AM (IST)

எச்.ராஜா காரை முற்றுகையிட முயன்ற விசி கட்சியினர் 25 பேர் கைது
புதன் 22, மார்ச் 2023 7:25:59 AM (IST)

பள்ளி ஆசிரியரை தாக்கியதாக மாணவனின் பெற்றோர் உட்பட 4பேர் கைது!
செவ்வாய் 21, மார்ச் 2023 8:28:04 PM (IST)

டி.சி.டபிள்யூ. சார்பில் உலக காடுகள் தினவிழா!
செவ்வாய் 21, மார்ச் 2023 7:45:25 PM (IST)

தமிழக பட்ஜெட் ஏமாற்றம்: அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 21, மார்ச் 2023 5:38:17 PM (IST)
