» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்தினால் நடவடிக்கை: போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை
திங்கள் 6, பிப்ரவரி 2023 8:45:53 PM (IST)
போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களை பொருத்தி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "துணைப்போக்குவரத்து ஆணையர், திருநெல்வேலி உத்தரவின்படி, தூத்துக்குடி பகுதிகளில் இயங்கும் இருசக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள், அதிக ஒலி எழுப்பும் பலகுரல் ஒலிப்பான்கள், மாற்றி அமைக்கப்பட்ட கேன்டில்பார்கள் மற்றும் தலைகவசங்களில் கேமரா பொருத்தி இயக்க கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. தவறும் பட்சத்தில் அபராதமாக ரூ. 10000 வசூலிக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும், இலகுரக நான்கு சக்கர வாகனங்களில் ஒட்டுநர் மற்றும் முன் இருக்கை, பின் இருக்கையிலிருந்து பயணிப்பவர்களும் கட்டயமாக சீட்பெல்ட் அணிய வேண்டும்; என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் அபராதம் வசூலிக்கப்படும். இது குறித்து இனிவருங்காலங்களில் தொடர்ந்து கண்காணிக்கப்படும்" என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் இறந்த வழக்கு: வேன் டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறை
புதன் 22, மார்ச் 2023 7:56:59 AM (IST)

ஆன்லைன் மோசடி: ரூ.4.67 லட்சம் பணம் மீட்பு
புதன் 22, மார்ச் 2023 7:44:40 AM (IST)

தி.மு.க. என்றாலே வன்முறை கட்சி : எச்.ராஜா பேட்டி
புதன் 22, மார்ச் 2023 7:34:24 AM (IST)

தூத்துக்குடியில் மறைந்த சப்-இன்ஸ்பெக்டர் உடலுக்கு காவல்துறையினர் அஞ்சலி!
புதன் 22, மார்ச் 2023 7:31:09 AM (IST)

எச்.ராஜா காரை முற்றுகையிட முயன்ற விசிக : கோவில்பட்டியில் பரபரப்பு
புதன் 22, மார்ச் 2023 7:25:59 AM (IST)

பள்ளி ஆசிரியரை தாக்கியதாக மாணவனின் பெற்றோர் உட்பட 4பேர் கைது!
செவ்வாய் 21, மார்ச் 2023 8:28:04 PM (IST)

prabhuFeb 7, 2023 - 05:54:48 AM | Posted IP 162.1*****