» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஓபிஎஸ் அணி அலுவலகம் திறப்பு
திங்கள் 6, பிப்ரவரி 2023 12:05:41 PM (IST)
தூத்துக்குடி அதிமுக ஓபிஎஸ் அணியின் மாநகர் மாவட்ட அலுவலகம் சிதம்பரநகரில் மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைமை தாங்கி திறந்து வைத்தார்.
விழாவில் மாவட்ட துணைச் செயலாளர் பழனிச்சாமி பாண்டியன், மாவட்ட இணை செயலாளர் உமா கண்ணன், மாவட்ட பொருளாளர் ஜோசப், கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், அயில் குமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தர்மசீலன், மாவட்ட ஜெ பேரவை தலைவர் ஆறுமுகத்துரை, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் குலாம், தொகுதி செயலாளர் எபின்டன், தொகுதி இணைச் செயலாளர்கள் வெள்ளபாண்டி, ஜெயராமன், மாவட்ட பிரதிநிதிகள் தமிழரசன், மகேஸ்வரன், மாவட்ட மாணவரணி செயலாளர் தங்ககட்டி ஜெகன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் மார்ட்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.