» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொட்டல்காடு புதிய பள்ளி கட்டிடடம் அடிக்கல் நாட்டு விழா

புதன் 1, பிப்ரவரி 2023 3:18:27 PM (IST)



தூத்துக்குடி அருகே பொட்டல்காடு கிராமத்தில் ரூ.41.50 இலட்சம் மதிப்பீட்டில்  பள்ளி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. 

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், முள்ளக்காடு ஊராட்சி, பொட்டல்காடு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 3 புதிய வகுப்பறைகள் ரூ.41.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டுமான பணியை வேலூரில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இதையொட்டி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் வசுமதி அம்பா சங்கர் தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் முன்னிலை வகித்தார். அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் ஜஸ்டினியன் மரியா வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பொறியாளர் தளவாய், வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் மகேஸ்வரி, வட்டார கல்வி அலுவலர்கள் தேவி, மரிய ஜெயஷீலா, பள்ளி உதவி தலைமையாசிரியர்கள் செல்வி, மரிய ஜோஸ்பின் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கிரேஸ் ஜெயந்தி ராஜகுமாரி நன்றியுரையாற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory